உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2022-08-22 07:26 GMT   |   Update On 2022-08-22 07:26 GMT
  • கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
  • ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கொடுமுடி:

கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.

இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.

இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News