உள்ளூர் செய்திகள்

கோவையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து

Published On 2023-03-28 09:23 GMT   |   Update On 2023-03-28 09:23 GMT
  • அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
  • இயைடுத்து போலீசார் லாரி டிரைவரான பிரதீப்குமாருக்கு அபராதம் விதித்தனர்.

சூலூர்,

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 5 பேர் ஒரு வேனில் உதவி கேட்டு பயணம் செய்தனர். அந்த வேன் சூலூரில் இருந்து அவினாசி சாலை செல்லும் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது முத்துக்கவுண்டன்புதூர் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது வேனுக்கு பின்னால் அதே திசையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் மேலே உள்ள கிரில் கழன்று வேனில் இருந்த மாணவர்கள் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஒரு மாணவருக்கு முதுகுப் பகுதியில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வேன் மற்றும் லாரி டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். லாரி டிரைவரான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (28) மது அருந்தியபடி வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பிரதீப் குமாருக்கு அபராதம் விதித்தனர். மேலும் மாணவர்களுக்கு உதவி செய்த வேன் டிரைவர் தர்மபுரி பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த மோகனை (36) இனி மேற்கொண்டு இவ்வாறு சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News