உள்ளூர் செய்திகள்

முண்டியம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சுகாதார துறை ஊழியர் பலி

Published On 2023-08-07 07:00 GMT   |   Update On 2023-08-07 07:00 GMT
  • ஜானகிராமன் உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது.
  • தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் ஜானகிராமன் (வயது 29). இவர் சுகாதாரத் துறையில் ஊழியராக சிதம்பரத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது முண்டியம்பாக்கம் ஆலைப் பகுதியில் உள்ள கூட்ரோட்டை கடக்க முயன்றார். இவரது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News