உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே சிறுவனை தாக்கிய நண்பர் - செல்போன் தர மறுத்ததால் ஆத்திரம்

Published On 2023-07-10 14:22 IST   |   Update On 2023-07-10 14:22:00 IST
  • 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
  • ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கலுங்கடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும், கீழப்பத்தையை சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேசும் (வயது26) நண்பர்கள் ஆவார்கள்.

இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சிங்கம்பத்தில் உள்ள பாலத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷ் சிறுவனிடம், அவரது செல்போனை கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவன் தனது செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ், சிறுவனை அவதூறாக பேசி, கற்களால் தாக்கினார்.

இதில் காயமடைந்த சிறுவன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி.ராஜு மற்றும் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி சிறுவனை தாக்கிய விக்னேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News