உள்ளூர் செய்திகள்

கோவையில் தாய்க்கு செல்போன் மூலம் தகவல் கூறி விட்டு மாயமான கல்லூரி மாணவி

Published On 2023-07-14 14:32 IST   |   Update On 2023-07-14 14:32:00 IST
  • என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
  • மாணவியின் பெற்றோர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கோவை,

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பேஷன் டெக்னாஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி தினசரி வீட்டில் இருந்து கல்லூரி வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மாணவி செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் தனக்கு பிடித்த மான நபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்காக ராமேசுவரம் சென்று கொண்டு இருக்கிறேன். எனவே என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தாயிடம் கூறி விட்டு சென்ற மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News