உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

Published On 2022-11-20 08:14 GMT   |   Update On 2022-11-20 08:14 GMT
  • குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.
  • மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்சாம்பட்டு கிராமத்எதை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 3 வயது குழந்தையை ஐஸ்வர்யா டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது திடீரென குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.

காயமடைந்த குழந்தையை சி கிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News