உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

Published On 2023-09-09 13:58 IST   |   Update On 2023-09-09 13:58:00 IST
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்து சென்று திருமணம்
  • 18 வயது தாண்டுவதற்கு முன்பே கர்ப்பமாக்கியது அம்பலம்

கோவை,

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியாமல் வாலிபர் சிறுமியை திருமணம் செய்தார்.

இதனை அறிந்த வாலிபரின் பெற்றோர் அவரிடம் சிறுமிக்கு 18 வயது தாண்டி விட்டதா என கேட்டனர். அதற்கு அவர் தாண்டி விட்டதாக கூறினார். இதனையடுத்து காதலர்கள் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் சிறுமி கர்ப்பமானார்.

வாலிபர் நேற்று சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 18 வயது தாண்டுவதற்கு முன்பே வாலிபர் அவரை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் 18 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News