உள்ளூர் செய்திகள்

நெல்லையில் பிளம்பரிடம் நூதன முறையில் ரூ.6 லட்சம் மோசடி

Published On 2023-11-01 08:58 GMT   |   Update On 2023-11-01 08:58 GMT
  • வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுங்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.
  • வங்கி கணக்கில் உள்ள அமெரிக்க டாலர்களை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள லத்திகுளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 42). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது முகநூல் பக்கத்தை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.

அப்போது அதில் கொடுக்க ப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்புறம் பேசிய பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புகிறேன். அதனை இந்தியாவில் கஷ்டப்படு பவர்களுக்கு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

அதனை உண்மை என்று மாடசாமி நம்பி உள்ளார். தொடர்ந்து அவரது செல்போனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கிடையே சில நாட்களில் மாடசாமியை தொடர்பு கொண்ட மற்றொரு நபர் வருமான வரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கி கணக்கில் அமெரிக்க டாலர்கள் இருப்பதை எடுப்பதற்கு வரியாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

அதனை உண்மை என்று நம்பிய மாடசாமி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 300-ஐ செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் 'சுவிட்ச் -ஆப்' ஆக இருந்துள்ளது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாடசாமி நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News