உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் லாட்ஜில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2023-08-29 09:10 GMT   |   Update On 2023-08-29 09:10 GMT
  • லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 320 பணத்தை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  

Tags:    

Similar News