உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 3½ ஆண்டு சிறை
- கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- நிவாரண தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு தரப்பிடம் இருந்து வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆதித்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிற்கு நிவாரணத் தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு திரைப்படம் இருந்து வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.