நகைக்கடைக்குள் புகுந்து 3 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.75 ஆயிரம் திருட்டு
- திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த டயானா கிறிஸ்டி என்பவர் சிக்கினார்
- நகை, பணம் திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி மூலம் கண்டறியப்பட்டது
கோவை,
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகை கடை வைத்திருப்பவர் விஜயகுமார் (வயது 67). இவர் சம்பவத்தன்று கடையில் இருந்தார்.
அப்போது ஒரு இளம்பெண் தங்கநகை வாங்குவதற்காக வந்திருந்தார். நகை கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு அந்த இளம்பெண் நகைக்கடையில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப்ப ணத்தை நைசாக திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.இதுதொடர்பா க காட்டூர் போ லீசார் வழக்கு ப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி காட்சிப்பதி வுகளை ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண் தங்கநகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசார ணையில் திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த டயானா கிறிஸ்டி (25) நகை, பணம் திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நகைக்கடை க்குள் புகுந்து 3 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.75 ஆயிரம் திருடியதாக, போலீசார் டயானா கிறிஸ்டி யை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தங்கராஜ் (65), இவர் ஒரு தனியார் கல்லூரியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார்.
அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 65 இன்ச் டிவி, விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆகியவை மாயமானது தெரியவந்தது.
தங்கராஜ் வீட்டுக்கதவை திறந்து வைத்திருந்ததால், மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து மேற்கண்ட பொருட்களை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.