உள்ளூர் செய்திகள்
கதண்டுகளை அழித்த தீயணைப்பு துறையினருடன் பேரூராட்சி துணை தலைவர் மாறன் மற்றும் பலர் உள்ளனர்.

கதண்டுகள் அழிப்பு

Published On 2022-06-03 09:43 GMT   |   Update On 2022-06-03 09:43 GMT
வலங்கைமான் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக கூடுகட்டியிருந்த கதண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
நீடாமங்கலம்:
 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வில் உள்ள வலங்கைமாபுரம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக கதண்டு கூடுகட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சிலரை கொட்டியும் வந்தன.

இந்நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வலங்கைமான் தீயணை ப்புத்துறையினர்உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

இதை அகற்றநடவடிக்கை எடுத்த வலங்கைமான் பேரூராட்சி துணை த்தலைவர் மாறன் மற்றும் 11வது வார்டு உறுப்பினர் வசந்தி பாஸ்கர் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News