உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பொன்முடி

தொலைதூர கல்வியை மீண்டும் தொடங்க வேண்டும்- கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை

Published On 2022-05-30 09:55 GMT   |   Update On 2022-05-30 15:30 GMT
இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியை மீண்டும் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவிடம் கவர்னர் முறையிட வேண்டும்.

பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல். இதில் கவர்னருக்கும் மாற்று கருத்து இருக்காது.

இடைநின்ற மாணவர்கள் மீதமுள்ள படிப்பை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தொடர கவர்னர் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News