உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் நடைபயிற்சி சென்ற முதியவர் கார் மோதி பலி
திருத்தணியில் நடைபயிற்சி சென்ற முதியவர் கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அரக்கோணம் சாலையில் குப்பா ரெட்டி (வயது 71) என்பவர் நடைபயிற்சி சென்றார். அப்போது அவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டிரைவர் தப்பி ஓடினார். ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட குப்பா ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.