உள்ளூர் செய்திகள்
நகை

குன்றத்தூர் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Published On 2022-05-14 06:00 GMT   |   Update On 2022-05-14 06:00 GMT
குன்றத்தூர் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆசாத் (42). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் குன்றத்தூர் மணிகண்டன் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள 3 மாடிக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 2-வது மாடியில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News