உள்ளூர் செய்திகள்
தொழிலாளி பலி

பூந்தமல்லி அருகே கட்டிட பணியில் தவறிவிழுந்த தொழிலாளி பலி

Published On 2022-05-13 06:54 GMT   |   Update On 2022-05-13 06:54 GMT
பூந்தமல்லி அருகே கட்டிட பணியில் தவறிவிழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய்சவுரி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் பூந்தமல்லி அடுத்த கூடபாக்கத்தில் நடைபெற்று வந்த தனியார் தொழிற்சாலை கட்டிடப் பணியில் வேலை செய்து வந்தார்.

இவர் பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்ந்தார். உடனடியாக அவரை மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனிற்றி விஜய்சவுரி இறந்து போனார். இதுகுறித்து ராம்மாலிக் வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News