உள்ளூர் செய்திகள்
கருமகாரியம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மருங்கூரில் ரூ7.5 லட்சம் செலவில் கருமகாரிய கட்டிடம்- சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2022-05-03 17:31 IST   |   Update On 2022-05-03 17:31:00 IST
பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் கருமகாரியம் கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூபாய் 7.5 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் கருமகாரியம் கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூபாய் 7.5 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து இன்று நடந்த விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கரும காரிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். தாசில்தார் சிவாகார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி துளசி, துணைத் தலைவர் சசிகலா ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், திமுக ஊராட்சி செயலர், ஜனார்தனன் ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News