கடலூர் மாவட்டத்தில் காவல் உதவி எண்கள் புகாருக்கு உரிய நடவடிக்கை
கடலூர்:
கடலூர் மாவட்ட காவல் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுறுத்தலின் பேரில் லேடிஸ் பர்ஸ்ட் என்ற புதிய காவல் உதவி எண் மூலம் புகார்கள் பெறப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணிற்கு 53 புகார்கள் வந்தன. 9 புகார்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 4 புகார்களில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கணவன் குடித்துவிட்டு மனைவியிடம் ஆபாசமாக திட்டி, சண்டை போடுவதாக 13 புகார்கள் மீது சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் கணவன், மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவரை எச்சரித்தும் , ஒழுங்காக குடும்பம் நடத்த தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியின் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தபோது காவல் உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு தான் படிக்கவேண்டும். தற்போது திருமணம் வேண்டாம். அதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறியதால் காவல்துறையினர் பெற்றோரிடம் நேரில் சென்று படிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி அவரின் கல்லூரி படிப்பு தொடர வழிவகை செய்யப்பட்டது.
கனவனை இழந்த 29 வயது பெண்ணின் மாமியார் கல்வி சான்றிதழ் , ஆதார்கார்டு ஆகியவற்றை வாங்கிவைத்துக்கொண்டு தரமறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதின் பேரில் அவரது மாமியாரை வரவழைத்து கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார்கார்டு போண்ற ஆவணங்களை பெற்று புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமண நிச்சயதார்த்தம் அன்று மாப்பிள்ளைக்கு கார் வாங்க ரூபாய் 2 லட்சம் பணத்தை கொடுத்ததாகவும் பிறகு மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சனை கேட்டதால் திருமணம ஒப்பந்தம் முறிக்கப்பட்டதாகவும் வாகனத்துக்கு வாங்கிய பணம் ரூபாய் 2 லட்சம் கொடுக்க மறுப்பதாக கூறியதின்பேரில் விசாரணை மேற்கொண்டு பணத்தை பெற்று அப்பெண்ணிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.