உள்ளூர் செய்திகள்
அழுகிய நிலையில் வாலிபர் வீட்டில் பிணமாக கிடந்தார்.
சாத்தூர்
சாத்தூர் பெருமாள் கோவில் வடக்குமாட வீதியை சேர்ந்த ஞானகுரு என்பவரின் மகன் மருதுபாண்டி (வயது 26), திருமணமாகவில்லை. இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது வீடு கடந்த 2 நாட்களாக உள்புறமாக பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து இன்று காலை கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அப்பகுதி மக்கள் உடனே சாத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மருதுபாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகி இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருதுபாண்டி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.