உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சாத்தூரில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-04-27 11:10 IST   |   Update On 2022-04-27 11:10:00 IST
சாத்தூரில் குடும்ப பிரச்சனை காரணமாக ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையம் அருகே ஒரு இளம்பெண் நேற்று முன்தினம் மாலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரெயில்வே போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் இறந்தவர் குறித்து விவரம் தகவல் கிடைக்காததால் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் இரவுநேர காவலராக பணிபுரியும் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சபர்மதி (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் பி.காம் பட்டதாரி ஆவார்.

சீனிவாசன் தனது மகள் குடும்ப பிரச்சினையின் காரணமாக நேற்று முன்தினம் முதல் காணவில்லை என்று தேடி வந்துள்ளார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசிலும் புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை குறித்து போலீசார் தகவல் அளித்தவுடன் சீனிவாசன் குடும்பத்தினருடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு இறந்தவர் தனது மகள் சபர்மதி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News