உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

மஞ்சூர் பகுதியில் கட்சி கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றம்

Published On 2022-01-28 16:35 IST   |   Update On 2022-01-28 16:35:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
ஊட்டி:

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சிகளுக்குட்பட்ட மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, குந்தாபாலம் உள்பட சுற்றுபுற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. 

பல்வேறு இடங்களில் அகற்றாமல் இருந்த கொடி கம்பங்கள், சுவரொட்டிகள், பேனர்களை கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் மூலம் அகற்றினார்கள். இதேபோல் சாலையோரங்களில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான தடுப்பு சுவர்களில் இருந்த கட்சி விளம்பரங்கள், வாசகங்கள் அழிக்கப்பட்டது. 

Similar News