உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

Published On 2022-01-18 14:05 IST   |   Update On 2022-01-18 14:05:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகளில் ஊட்டி மற்றும் குன்னூர் நகராட்சிகளின் தலைவர் பொறுப்புகள் பெண்களுக்கான பொது பொறுப்புகளாக மாறியுள்ளன.

கூடலூர் நகராட்சி தாழ்தப் பட்ட பெண்தலைவருக்கான  பொறுப்பாகவும், நெல்லியாளம் நகராட்சி பழங்குடியின பெண் தலைவ ருக்கான பொறுப்பாகவும் மாறி உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் சோலூர் மற்றும் தேவர்சோலை பேரூராட்சிகளின் தலைவர் பொறுப்புக்கள் பழங்குடியின பெண் தலைவருக்கான பொறுப்புகளாகவும், கோத்தகிரி, ஓவேலி, கீழ்குந்தா, அதிகரட்டி, உலிக்கல் ஆகிய 5 பேருராட்சிகள் தாழ்த்தபட்ட பெண் தலைவர்களுக்கான பதவிகளாக அறிவிக்கபட்டு உள்ளன.

நடுவட்டம் பேருராட்சி பொது பதவியாக அறிவிக்கபட்டு உள்ளது. கேத்தி, ஜெகதளா, பிக்கட்டி பேரூராட்சிகள் பெண் தலைவர்களுக்கான பொது பதவிகளாக அறிவிக்கபட்டு உள்ளன.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி,  நகராட்சி தலைவர் பொறுப்புகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது குறிப்பிடதக்கதாகும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

நீலகிரி மாவட்டத் தில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளும்  பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதால் போட்டியிட்டு வெற்றி பெறும் பெண் தலைவர்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மையுடன் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News