செய்திகள்
தற்கொலை

இளம்பெண் தற்கொலை- சீர்காழி உதவி கலெக்டர் விசாரணை

Published On 2021-11-20 10:35 GMT   |   Update On 2021-11-20 10:35 GMT
செம்பனார்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீர்காழி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே கிடங்கல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (வயது 21). கீழையூர் கிராமம் உடையார் இருப்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் முருகன் (30). கொத்தனாரான இவருக்கும் ரேணுகாதேவிக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கணவன் வீட்டில் வசித்து வந்த ரேணுகாதேவி நேற்று முன்தினம் மதியம் தூங்குவதற்காக அறைக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வீட்டில் இருந்தவர்கள் அறையின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட ரேணுகாதேவிக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News