செய்திகள்
போதை ஊசி விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது
போதை ஊசி விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மச்சுவாடி பகுதியில் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்த அஜித் குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.