செய்திகள்
முருகன்

தொடர் உண்ணாவிரதம்: முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு

Published On 2020-12-03 02:24 GMT   |   Update On 2020-12-03 02:24 GMT
23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

அதன்படி நேற்று 10-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், உண்ணாவிரதம் குறித்த அறிக்கையை வேலூர் ஜெயில் அதிகாரிகள் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News