பொய்கை சந்தை அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொய்கை சந்தை அருகே வாகனம் மோதி முதியவர் பலி
பதிவு: டிசம்பர் 02, 2020 16:06
விபத்து பலி
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை சந்தை அருகே பெங்களுரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 65 வயது முதியவர் ஒருவர் நேற்று காலை 6.30 மணியளவில் ரத்த
காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் வெள்ளை மற்றும் நீல கலரில் சட்டையும், வேஷ்டியும்
அணிந்திருந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதியவர் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி
உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து
வருகிறார்கள்.