செய்திகள்
கோப்புபடம்

காட்பாடி அருகே குடிபோதையில் கார் ஓட்டிய 2 பேர் கைது

Published On 2020-12-01 15:00 GMT   |   Update On 2020-12-01 15:00 GMT
காட்பாடி அருகே குடிபோதையில் கார் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சித்தூர் பஸ்நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.

அப்போது காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த சுனில் (வயது 33), சுகர்மில் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பெருமாள் (40) ஆகியோர் குடிபோதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News