செய்திகள்
தொழிலாளி வீட்டின் அருகே உருண்டு விழுந்த பாறை

வேலூர் ஓல்டு டவுனில் தொழிலாளி வீட்டின் அருகே பாறை உருண்டு விழுந்தது

Published On 2020-11-27 07:31 IST   |   Update On 2020-11-27 07:31:00 IST
மலையில் இருந்து பாறை உருண்டோடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காற்றினால் சாலையோர மரங்கள், தென்னை மரங்கள் தலைவிரித்தாடின. பல இடங்களில் மரங்கள் சரிந்து சாலைகளில் விழுந்தன. ஓல்டு டவுன் மலையில் இருந்து பாறை உருண்டோடி அந்த பகுதியில் வசித்த தொழிலாளி முருகன் வீட்டின் அருகே விழுந்தது. அதைக்கண்டு முருகன் மற்றும் அவருடைய மனைவி ஆனந்தி அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் சற்று தொலைவில் விழுந்திருந்தால் வீட்டின் மீது விழுந்திருக்கும். 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த பாறையை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முருகன், ஆனந்தி மற்றும் அந்த பகுதியில் வசித்தவர்கள் அருகேயுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மலையில் இருந்து பாறை உருண்டோடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News