செய்திகள்
கோப்புபடம்

வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல் - 180 பேர் கைது

Published On 2020-11-09 17:53 IST   |   Update On 2020-11-09 17:53:00 IST
பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

சென்னை திருவெற்றியூரில் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க.வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரியும் நேற்று மதியம் மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் தணிகைவேல் ஆலோசனைக்கு இணங்க திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள திருவள்ளூவர் சிலை அருகில் பா.ஜ.க.வினர். திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் மூவேந்தன், எஸ்.சி.அணி பொதுச் செயலாளர் விஜயராஜ், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் நடராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரியும் வெற்றிவேல், வீரவேல் என்று கண்டன கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 180 பேரை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News