செய்திகள்
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ரஞ்சித்குமார். இவர் திருவண்ணாமலையை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரஞ்சித்குமாரின் தாய் உள்பட 7 பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.