செய்திகள்
போளுர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
போளுர்:
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதாநேதாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பி.அண்ணாமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையில் டாக்டர்கள் பாரதி, பிரபாகர், யோகேஷ்பாபு, இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி, கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
போளுரை அடுத்த முக்குரும்பை கிரமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆர்.மீரா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதாநேதாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணவேணிசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பி.அண்ணாமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையில் டாக்டர்கள் பாரதி, பிரபாகர், யோகேஷ்பாபு, இளங்கோ, கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, ஈ.சி.ஜி, கண்புரை பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர். இதில் 3 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.