செய்திகள்
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ஜூனாபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 55), தொழிலாளி. இவர் 2 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பச்சையப்பன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.