குத்தாலத்தில் லாரி மோதி வாலிபர் பலி
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் கடைவீதியில் டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக குத்தாலம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாலை விபத்தில் பலியானவர் குத்தாலம் தாலுகா கொழையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் கரூர் மாவட்டம் பாப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சரவணகுமார் (25) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.