செய்திகள்
கைது

சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2020-07-14 13:07 GMT   |   Update On 2020-07-14 13:07 GMT
சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:

கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ராதாமங்கலம் மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (42), சிக்கல் குற்றம் பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தனபால்(53), பெருங்கடம்பனூர் காலனி தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மாதவன் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 330 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News