செய்திகள்
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
படப்பை:
படப்பை அரிகோண் நடுவீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). தொழிலாளி. இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் புறப்பட்டார்.
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்ற போது இவருடைய மோட்டார் சைக்ளிள் மீது லாரி மோதியது. இதில், வெங்கடேசன், அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். ஒடகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.