செய்திகள்
கைது

கீரனூர் அருகே உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2019-11-07 12:58 GMT   |   Update On 2019-11-07 12:58 GMT
கீரனூர் அருகே தகராறில் உறவினரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கீரனூர்:

கீரனூர் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாண்டி (வயது 28).அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (32). இவர்கள் இருவரும் உறவினர்கள். இருப்பினும் சில பிரச்சினையால் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்னர்.

இந்த நிலையில் இருவருக்குமிடையே வாய்த்தகறாறு ஏற்பட்டது. பின்னர் அது முற்றிப்போய் ஆத்திரத்தில் சிவசங்கரை பாண்டி மறைத்து வைத்திருந்து தனது அரிவாளால் சராமரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு தலை, கழுத்து, நெஞ்சு பகுதியல் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து போலீசார் பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News