செய்திகள்
தற்கொலை

ஆலங்குடி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2019-11-04 12:49 GMT   |   Update On 2019-11-04 12:49 GMT
ஆலங்குடி அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி மகன் தங்கமுத்து (வயது 25). இவர் சிறு வயது முதலே மேலப்பட்டி ராசியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி அங்கம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. 

இதனால் மனமுடைந்த தங்கமுத்து ,வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நெற்பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  தங்கமுத்து இறந்தார். 

இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News