செய்திகள்

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2019-05-28 09:24 GMT   |   Update On 2019-05-28 09:24 GMT
திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசிப்பவர் கண்ணன் (26). காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாளாக பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார்.

பல பகுதிகளில் பெண் பார்த்தும் அவருக்கு எந்த வரனும் கிடைக்கவில்லை. இதனால் கண்ணன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற கண்ணன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News