செய்திகள்

பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்- ஈபிஎஸ், ஓபிஎஸ் டெல்லி பயணம்

Published On 2019-05-25 05:18 GMT   |   Update On 2019-05-25 05:18 GMT
பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்
சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள மோடி வருகிற 30-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்கான பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.

இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் சென்றார்.

முன்னதாக ரவீந்திரநாத் குமார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tags:    

Similar News