செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2019-05-22 18:10 GMT   |   Update On 2019-05-22 18:10 GMT
ரெயில் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார்சைக்கிள் மோதி பெண் பலியானார்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு இட்லி கடை வைத்திருந்தவர் கனகா (வயது 55). இவர் ரெயில் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கனகா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கனகாவின் உறவினர் சந்தானபாண்டி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் கனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து விபத்தை ஏற்படுத்திய கணவாய் பகுதியைச் சேர்ந்த சின்ன பெருமாள் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News