செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - சிறுவன் பலி

Published On 2019-05-19 17:45 GMT   |   Update On 2019-05-19 17:45 GMT
ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான்.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் சிலம்பூர் பூக்குழி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட போது விஜயராஜ் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News