செய்திகள்
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - சமையல்காரர் பலி
கொணலை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சமையல்காரார் பலியானார்.
சமயபுரம்:
சிறுகனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொணலை அருகே உள்ள கல்பாளையம் காந்தி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் முருகேசன் (வயது 38). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். செங்கல்பட்டில் இருந்து மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு செல்வார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் தச்சங்குறிச்சியில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிறிதுதூரம் வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொணலை அருகே உள்ள கல்பாளையம் காந்தி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் முருகேசன் (வயது 38). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். செங்கல்பட்டில் இருந்து மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு செல்வார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் தச்சங்குறிச்சியில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சிறிதுதூரம் வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.