செய்திகள்

மதுரை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன்-பணம் கொள்ளை

Published On 2019-05-09 17:20 GMT   |   Update On 2019-05-09 17:20 GMT
மதுரை அருகே பெண் பயணியிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை:

ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பாவடித் தெருவைச் சேர்ந்தவர் வெஸ்லின். இவரது மனைவி சாந்திமணி. இவர், சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவர் கைப்பையில் 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார்.

மதுரை அருகே பஸ் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சாந்திமணியின் கைப் பையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.

மதுரை வந்திறங்கிய சாந்திமணி, கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News