செய்திகள்
வல்லம் அருகே பாட்டி, பேரன் மீது தாக்குதல் - விவசாயி கைது
வல்லம் அருகே பாட்டி மற்றும் பேரம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்:
வல்லம் அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 68), இவரது பேரன் ஆகாஷ் (16). சம்பவத்தன் ஆகாஷ் தனது பாட்டி மலர்கொடியுடன் குருங்குளம் அருகே உள்ள கரும்பு கொல்லையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குருங்குளம் சாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (39) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். அப்போது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் ஆகாஷ் சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆகாசை துரத்தி சென்று பிடித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மலர் கொடியையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆகாசும், மலர்கொடி இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
வல்லம் அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 68), இவரது பேரன் ஆகாஷ் (16). சம்பவத்தன் ஆகாஷ் தனது பாட்டி மலர்கொடியுடன் குருங்குளம் அருகே உள்ள கரும்பு கொல்லையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குருங்குளம் சாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (39) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். அப்போது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் ஆகாஷ் சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆகாசை துரத்தி சென்று பிடித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மலர் கொடியையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆகாசும், மலர்கொடி இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.