செய்திகள்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா திருச்சியில் அ.ம.மு.க. பிரமுகர் கைது
திருச்சியில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அ.ம.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டியில் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் கட்சி சார்பில் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் சேகர் என்பவர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தேர்தல் அதிகாரிகள் மடக்கி பிடித்து மண்ணச்சநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.2700 பணத்தை பறிமுதல் செய்தனர்.