செய்திகள்
இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.39 லட்சம் தங்கம் சிக்கியது
இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.39 லட்சம் தங்கத்தை கடத்தி வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்த போது ரப்பர் ஸ்பாஞ்சில் தங்கத்தை மறைத்து உடலில் கட்டி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம்.
தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். பெயர் விவரம் உடனே வெளியிடப்படவில்லை.
இவர்கள் யார்? தங்கம் கடத்தும் கும்பலுக்கும் இந்த 4 பேருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்த போது ரப்பர் ஸ்பாஞ்சில் தங்கத்தை மறைத்து உடலில் கட்டி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம்.
தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். பெயர் விவரம் உடனே வெளியிடப்படவில்லை.
இவர்கள் யார்? தங்கம் கடத்தும் கும்பலுக்கும் இந்த 4 பேருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.