செய்திகள்
வாய்மேடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
வாய்மேடு அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாய்மேடு:
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகரத்தினம் (வயது 30). தொழிலாளி. இவர் வாய்மேடு கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாய்மேடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி முருகரத்தினம் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகரத்தினம் (வயது 30). தொழிலாளி. இவர் வாய்மேடு கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாய்மேடு துணை மின் நிலையம் அருகே சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி முருகரத்தினம் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.