செய்திகள்

ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் தங்கி இருந்த இலங்கை வாலிபர் கைது

Published On 2019-03-21 11:43 GMT   |   Update On 2019-03-21 11:43 GMT
ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் நாட்டை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி இருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

பின்னர் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் மோகனரூபன் (வயது25) என தெரியவந்தது.

மோகனரூபன் விசா பெற்று சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். 3 மாதத்திற்கு முன்பு விசா காலாவதியாகி விட்டது. ஆனாலும் அவர் இலங்கை செல்லாமல் ராமநாதபுரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனரூபனை கைது செய்தனர்.
Tags:    

Similar News