செய்திகள்

விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-03-17 12:48 GMT   |   Update On 2019-03-17 12:48 GMT
கோவையில் விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

இவரது மகள் தாரணி (வயது 20) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ளார்.

இவர் கொச்சியில் உள்ள ‘நே‌ஷனல் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி’ மேல்படிப்பு படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தாரணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News