செய்திகள்

திருவாரூரில் காதல் கணவருடன் மாணவி போலீசில் தஞ்சம்

Published On 2019-03-13 10:44 GMT   |   Update On 2019-03-13 10:44 GMT
திருவாரூரில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் கணவரை திருமணம் செய்து கொண்ட மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.

திருவாரூர்:

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சுவேதா (வயது22). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற சுவேதா மீண்டும் திரும்பி வரவில்லை. இது குறித்து குமார் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுவேதா தனது காதல் கணவருடன் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தன்னுடன் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்த நாகை மாவட்டம் கீழ்வேளூரை சேர்ந்த குணசேகரன் மகன் ஆனந்த் என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சுவேதா- ஆனந்தின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News